அடைமொழி
அடைமொழி என்பது பலவகைகள் உள்ள ஒரு பொருளை, எவ்வித ஐயமும் இன்றி அப்பொருளை மட்டும் குறிக்கப் பயன்படுத்தும் ஒரு தனிச்சொல் ஆகும். இது பெயரை மற்றும் வினையை என இரண்டு வகைப்படும். பெயரை விளக்கிக் கூற வரும் சொல் பெயரடை எனவும், வினையை விளக்கிக் கூற வரும் சொல் வினையடை எனவும் கூறுவர். பெயரடை - (Adjective) எ.கா : சிறந்த மாணவன், பெரிய கோவில், வெள்ளை மாளிகை.... வினையடை - (Adverb) எ.கா : மெதுவாக வரைந்தான் , அழகாகச் செய்தாள் , வாரந்தோறும் சென்றார்கள் . அடைமொழியானது இனமுள்ள அடைமொழி மற்றும் இனமில்லா அடைமொழி எனவும் இருவகைப்படும். இனமுள்ள அடைமொழி : பலவகைகள் உள்ள ஒரு பொருளை, எவ்வித ஐயமும் இன்றி அப்பொருளை மட்டும் குறிக்கப் பயன்படுத்தும் ஒரு தனிச்சொல் ஆகும். எ.கா : பால் குடம் (குடத்தில் - பால் குடம், தண்ணீர்க்குடம், தேன் குடம், நெய்க்குடம் என எது வேண்டுமானாலும் இருக்கலாம் என்னும் ஐயம் ஏற்படலாம் அல்லவா? எனவே தெளிவாக உணர்த்தவே இவ்வடைமொழி தேவைப்படுகிறது) செந்தாமரை (செந்தாமரை, வெண்டாமரை) தமிழ்ப் புத்தகம் ( தமிழ்ப்புத்தகம், ஆங்கிலப்புத்தகம், கணிதப்புத்தகம், அறிவி...