அன்னையர் தின வாழ்த்து
*அ* ன்பும் அக்கறையும் கொண்டு *ஆ* ண்டுகள் பல கடந்தும் ஆயிரமாயிரம் *இ* ன்னல்கள் கடந்தும் இத்தனை இடையூறுகளுக்கு இடையே *ஈ* ன்ற போது இருந்த அருள் இம்மியளவும் குன்றாது *உ* னது அரவணைப்பு என்னும் அரண் கொண்டு எங்களைக் காக்க உனது *ஊ* ணை உருக்கி உயிரையும் உடலையும் துச்சமென *எ* ண்ணி எங்களின் *ஏ* ற்றத்திற்கு ஏணியாய் இருந்தாய் என்பதில் ஏதும் *ஐ* யமில்லை , நாங்கள் எங்களின் *ஒ* வ்வொரு படி(நிலை)யையும் கடக்க வழிதந்த பாலம் நீ, அன்றாடம் நீ *ஓ* திய மந்திரங்களும் இறைவழிபாடுகளும் தான் எங்களின் ஊழ் என்னும் நோயுக்கான *ஔ* டதமாய் எங்கள் வாழ்வை காத்து நிற்கிறது இனியும் காக்கும். அன்பு நிறைந்தவளுக்கு எங்களின் அன்னையர் தின வாழ்த்துக்கள்