அன்னையர் தின வாழ்த்து
*அ* ன்பும் அக்கறையும் கொண்டு
*ஆ* ண்டுகள் பல கடந்தும் ஆயிரமாயிரம்
*இ* ன்னல்கள் கடந்தும் இத்தனை இடையூறுகளுக்கு இடையே
*ஈ* ன்ற போது இருந்த அருள் இம்மியளவும் குன்றாது
*உ* னது அரவணைப்பு என்னும் அரண் கொண்டு எங்களைக் காக்க உனது
*ஊ* ணை உருக்கி உயிரையும் உடலையும் துச்சமென
*எ* ண்ணி எங்களின்
*ஏ* ற்றத்திற்கு ஏணியாய் இருந்தாய் என்பதில் ஏதும்
*ஐ* யமில்லை , நாங்கள் எங்களின்
*ஒ* வ்வொரு படி(நிலை)யையும் கடக்க வழிதந்த பாலம் நீ, அன்றாடம் நீ
*ஓ* திய மந்திரங்களும் இறைவழிபாடுகளும் தான் எங்களின் ஊழ் என்னும் நோயுக்கான
*ஔ* டதமாய் எங்கள் வாழ்வை காத்து நிற்கிறது இனியும் காக்கும்.
அன்பு நிறைந்தவளுக்கு எங்களின் அன்னையர் தின வாழ்த்துக்கள்
Comments
Post a Comment